சிந்திக்க வேண்டிய தருணம்

உழைக்க வேண்டிய நேரத்தில்
......உண்மையை உழைத்திடு
ஊதியம் உன்னை வந்து சேரும்,

கற்க வேண்டிய காலத்தில்
......சரியாக கற்றிடு
அறிவு உன்னை வந்து சேரும்,

கடமையாற்றும் நேரத்தில்
......கவனமாக இரு
சிறப்பு உன்னை வந்து சேரும்,

எதிர்த்து நிற்கும் காலத்தில்
.......விவேகம், வேகம் இராண்டையும் கடைபிடி,
வெற்றி உன்னை வந்து சேரும்,

தட்டி கேட்கும் காலத்தில்
.......தன்னம்பிக்கையோடு இரு
தாயகம் உனைத் திரும்பி பார்க்கும்,

பாராட்டு கிடைக்கும் காலத்தில்
......பண்போடு நடந்திடு
பெரும்படையும், உன்னிடம் சரணடையும்,

சோகம் வந்த காலத்திலும்
......சோர்ந்திடாமல் இரு
சோதனை உனைக் கண்டு பயந்திடும்,

தோல்வி கண்ட காலத்திலும்
.......உவகையோடு இரு
உயர்வு உன்னை வந்து சேரும்,

மாறி வரும் காலத்திலும்
......மனம் தளராமல் இரு
மண்ணில் உன் புகழ் நிலைத்திடும்.

-கலைப்பிரியை

எழுதியவர் : கலைப்பிரியை (3-Apr-18, 4:30 pm)
சேர்த்தது : kalaipiriyai
பார்வை : 144

மேலே