அவள்

பௌர்ணமி ஒளியின் குளுமையில் அவனுடைய காதலே நினைவுக்கு வர...
அவனைத் தேடி அலைந்தாள்...

முழு சந்திரனின் வெண்மையில் அவன் முகத்தையே அவள் கண்டாள்...
அவனுக்காக ஏங்கித் துடித்தாள்...

விண்மீன்களோ அவளையே நோக்குவது போல இருந்தது...
இப்படியொரு அழகான சூழலில் அதை அனுபவிக்க முடியாமல் தவித்தாள்....

அவனை அவளுடைய காதலனை எண்ணி ஏங்கும் பேதைப் பெண்..

எழுதியவர் : தமிழிசை (6-Apr-18, 11:26 am)
சேர்த்தது : தமிழிசை
Tanglish : aval
பார்வை : 333

மேலே