இரை தேடும் பறவை

நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு:: 26 March’2018
படம் நன்றி:: கூகிள் இமேஜ்

=====================
இரை தேடும் பறவை..!
=====================

வரைமுறை ஏதுமிலையெல்லாம் வல்ல இறைவனுக்கு
..........வகையாய் அனைத்தையும் படைத்தே ஆளுகிறான் *
கரையிலாக் கடல்போல் பரந்த(அ)வன் படைப்பிலே
..........காணுகின்ற அற்புதத்தில் ஒன்றுதான் பறவையினம் *
இரைதேடவே வாழ்வில் பெரும்பகுதி கழிந்துவிடும்
..........இதற்கொரு ஈடிணையான படைப்பிலை யெனலாம் *
வரைவியலோடு நாமிதை ஆராய்ந்தால்? நமக்குமே
..........வரும் பொறாமை! வாழ்விலது வாராதிருக்கவேணும் *



மண்டலத்தில் உலவு முயிரினத்தில் பறவையுமொன்று
..........ஒவ்வொன்றுக்கும் ஒப்பிலாத தனித் திறமையுண்டு *
உண்டழிவென்று தெரிந்தாயிவை? ஓராயிரம் மைல்
..........நீண்டதூரம் ஓய்வின்றிப் பறக்கிறது! வியப்புதானே *
கண்டம்விட்டுக் கண்டம் தாண்டியும் பறக்குமாமது
..........கொண்ட கொள்கையால் சேருமிடம் சென்றுவிடும் *
பண்டைக் காலமுதலே பறவையதன் குணமறிந்து
..........படைப்பின் பயனையறிந்து கொண்டார் பாமரரும் *



புரையோடிக் கிடக்கும் லஞ்சஊழல் உலகிலினில்
..........புரிந்துகொள்ள வேண்டிய தென ஏராளமுண்டாம் *
வரையிலாமல் படித்தது வாழ்வில்செய்த பிழையா?
..........வளர்த்த தகுதிக்கு தகும்வேலை தரணியிலில்லை *
அரைப்படிப்பு படித்து அரங்கத்தில் அமர்ந்தவரோ
..........ஆயிரம் கேள்விகேட்பார் வேலையென வந்தால் *
நரைமுடியும் தோன்றி ரத்தநாளமும் சுருங்கியது
..........இரைதேடும் பறவைபோல இன்றும் அலைகிறேன் *
===================================================

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (9-Apr-18, 6:16 pm)
பார்வை : 137

மேலே