முதுமொழிக் காஞ்சி 58

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
இசையிற் பெரியதோர் எச்சம் இல்லை. 8

- இல்லைப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் புகழுடைமையின் மிக்குப் பிறர் பயப்பதோர் ஆக்கம் ஒருவர்க் கில்லை.

எச்சம் - (எஞ்சல் - மிஞ்சல்) - மிஞ்சியிருப்பது: மிச்சமாக இருப்பது.

தந்தை முதலியோர் இறக்கும்போது மிச்சமாக வைத்த பொருள்.

அதை உரையாசிரியர் ‘பிறர் பயப்பதோ ராக்கம்' என்றார்: ஆஸ்தி: செல்வம்.

பதவுரை: இசையின் - கீர்த்தியைக் காட்டிலும், பெரியது - சிறந்ததாகிய, ஓர் எச்சம் - ஒப்பற்ற ஆஸ்தி, இல்லை - வேறில்லை.

வசையென்ப வையத்தார்க் கெல்லாம்இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின். 238 புகழ்

தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.

கீர்த்தியைப்போல் சிறந்த செல்வம் இல்லை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Apr-18, 9:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 76

சிறந்த கட்டுரைகள்

மேலே