புரியாத புதிராய் உன் மௌனம்
அம்மாவின் குரலுக்கு
துள்ளி ஓடும்
பிள்ளையாய்
உன் ஓட்டம்
தடங்கல்களை
தாண்டும்
காதலர்களாய்
உன் ஊடுருவல்
பேதம் பாராது
அரவணைக்கும்
அன்னையாய்
உன் அரவணைப்பு
தேவைக்கு பகிரும்
சகோதரியாய்
உன் பிடிவாத பகிர்தல்
நான் ரசித்த
உன் அத்தனை அழகும்
தங்கள்
கட்டுப்பாட்டுக்குள்
மட்டும்
வைத்திட துடிக்கும்
கௌரவக் கொலையை
வரவேற்கும்
காதலை வெறுத்த
பெற்றோராய்
உன்னை
சுற்றியுள்ளோர்
உன்னை தெரியும்
எனக்கு
உன் மௌனம் மட்டும்
புரியாத புதிராய்
எதுவென்றாலும்
சொல்லிவிடு
யாரையும் வஞ்சித்து
விடாதே..,
நா.சே..,