நாயின் கோபம்

ஏண்டா...ஏண்டி...
உங்களுக்கு
ரோசம்
மானம்
வெட்கம்
சூடு சுரணை
எதுவுமே இல்லையா...
வயிற்றுக்கு
உப்பு போட்டுத்தானே
சோறு தி்ன்கின்றீர்கள்...
ஆமாம்...
நன்றி கெட்ட நாயே என்று
திட்டுகின்றீர்களே...
நான்
எப்பொழுது
நன்றி கெட்டிருக்கிறேன்...?
இனிமேல்..
நன்றி கெட்ட மனிதனே!
என்று திட்டுங்கள்...
திரும்பவும்
யாராவது
அப்படி திட்டினீர்கள்...
நான்
நாயாக இருக்கமாட்டேன்
மனிதனாக மாறிவிடுவேன்...

படைப்பு
கவிதை ரசிகன் குமரேசன்

எழுதியவர் : கவிதை ரசிகன் (14-Jun-18, 11:58 am)
Tanglish : naayin kopam
பார்வை : 92

மேலே