கண்ணதாசனை காணுவோம் -----------தத்துவம் ----------போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா; இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
வந்தது தெரியும் போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது
வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
ஜனனம் என்பது வரவாகும் – அதில்
மரணம் என்பது செலவாகும்.
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
உலக இலக்கியம்-கண்ணதாசன்
அப்போதுதான் இளையதலைமுறைகளுக்கு, அக்கால வாழ்க்கை நெறிமுறைகளை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்க முடியும். ஏனெனில் காதல், அன்பு, பாசம், தாய்மை, வீரம், மொழிப்பற்று, தேசப்பற்று, ஏக்கம், வெட்கம் என அனைத்தும் அன்றைய காலகட்டத்தில் எவ்வாறு சமூகத்தில் பின்னிப் பிணைந்திருந்தது என்பதற்கு சான்று கண்ணதாசனின் அனைத்து வகை பாடல்களுமே. சங்க இலக்கிய செழுமையும், யதார்த்த வாழ்வியலின் எளிமையும் பாமரனும் சென்றடைய எழுதிய பாங்கே கண்ணதாசனின் என்னும் மகாகவியின் வெற்றியின் ரகசியம் இதுவரை வெற்றிநடை போட்டு வருகிறது. வாழ்க்கையின் அனைத்து பக்கங்களையும் தெரிந்துகொள்ள உலக இலக்கியங்கள் தேவையில்லை-கண்ணதாசனின் பாடல்களே போதும். மெட்டுக்குள் கட்டுப்படுகிற வார்த்தைகளில் வாழ்வியலின் உணர்வுகள் அத்தனையும் தெறித்து அழகியல்நடை போடும் கவியரசரின் பாடல்களில். அதனால்தான் கண்ணதாசன் இன்றும் காலத்தின் பொற்கனியாய் இனித்து கொண்டிருக்கிறார்.