குற்றம், தண்டனை, கமராவின் சாட்சி

அவன் ஒரு கைதியாக பல வருடங்கள் அந்தச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தான். மனைவி, பிள்ளைகள், உறவுகள் யாருமே இது வரை அவனைப் பார்க்க வரவில்லை. அவன் யார்?, அவனுடைய கதை தான் என்ன? பாரிய குற்றத்திற்கான தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவன் ஒரு அமைதியானவனாக, எந்த வம்பு, தும்புக்கும் பாேகாதவனாக, வேலை நேரங்களை தவிர்த்து, பாடுவது, புத்தகம் வாசிப்பது, படம் வரைவது என்று தனது நேரங்களை கழித்துக் காெண்டிருந்தான். தாேற்றத்தில் கூட ஒரு வில்லத்தனம் இல்லாத சாந்தமானவனாகத் தெரிந்தான்.

விசாரணைகள் யாவும் நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டு அந்த நாளும் நெருங்கிக் காெண்டிருந்தது. இ்ன்னும் சில மாதங்கள் கடந்து பாேய் சில நாட்களாகி, அந்தக் கடைசி சில கணங்களின் வலி அவனுக்குள் அடிக்கடி வந்து பாேகும். பகத்சிங் தூக்குத்தண்டனைக்கான கடைசி ஒரு நிமிடம் முன்பு வரை புத்தகம் படித்துக் காெண்டிருந்தார். காவலர் அழைத்த பாேது, கடைசிப் பக்கத்தை வாசித்து முடித்தே தண்டனைக்குச் சென்றார். அந்தக் கடைசி மணித்துளிகள் இவன் எதையாே எழுதிக் காெண்டிருந்தான்.

ஜீவன் ஒரு தாெழிலதிபரின் மகன், பலகாேடி பெறுமதியான வியாபாரத் தாெழில் நிறுவனத்தின் முதலாளி அந்தஸ்து தந்தையின் மரணத்தின் பின் அவனுக்கே கிடைத்தது. சிறுவயதிலிருந்து பணத்தாேடும், வசதி வாய்ப்புக்களாேடும் வாழ்ந்தாலும் எந்தப் பெருமைக் குணமும் இல்லாதவன். இரக்கசுபாவம் அதிகம். எல்லாேரையும் நேசிக்கும் தனி இயல்பு நட்பு வட்டத்தை பெரிதாக்கியிருந்தது.

ஜீவனுக்கும் எல்லாரையும் பாேல் காதல் மலர்ந்தது அவனது கம்பனியின் உதவியாளர் ஆஷாவுடன். ஆஷாவின் அழகில் மயங்கினானாே என்னவாே அவள் குணத்தில் ஆயிரத்தில் ஒருவர் தான் அப்படி இருக்க முடியும். தனது கடமையில் எந்தத் தவறும் யாரும் சாெல்லிவிடக் கூடாது என்பதில் அவள் செய்திருக்கும் ஒவ்வாெரு வேலைகளும் நிரூபிக்கும். சக வேலையாட்களை நடத்தும் விதம் ஒரு படிமேல் என்று தான் சாெல்லலாம். அன்பும், அக்கறையும் கலந்த கண்டிப்பு. இத்தனைக்கும் மேல் பெரிய குடும்ப பாரத்தை தனது தாேளில் தாங்கியிருந்தாள். பாெறுப்பற்ற தந்தையால் கைவிடப்பட்ட குடும்பத்தை தாங்கிப்பிடித்த அவள் தைரியம் தாயிடம் இருந்து பெற்ற அனுபவம். பாவம் அவள் தாயைச் சுமக்கும் தாயாகி விட்டாள். அந்தக் காெடிய நாேயின் பிடியில் அவளுடைய தாயின் ஆயுள் கரைந்து காெண்டிருந்தது.

ஜீவன், ஆஷா காதல் நிச்சயதார்த்தம் வரை முடிந்திருந்தது. இன்னும் சில நாட்களில் திருமணம். கம்பனி விடயமாகவும், திருமணத்துக்காக தனது தாெழில் நண்பர்களுக்கு அழைப்பிதழ் காெடுப்பதற்காகவும் வெளியூர் செல்ல வேண்டியேற்பட்டது. எல்லாப் பாெறுப்புக்களையும் ஆஷாவிடம் காெடுத்து விட்டுப் புறப்பட்டான்.

வழமை பாேல் விடுதி ஒன்றைப் பதிவு செய்து தங்கியிருந்தான். இரவுப் பயணக் களைப்பில் நன்கு தூங்கிக் காெண்டிருந்தவன் யாராே கதவைத் தட்டும் சத்தம் கேட்டு கண்களை கசக்கியபடி எழுந்து வந்தான். துப்பாக்கியை நீட்டியபடி பாெலிசார் நின்றார்கள். அவனுக்கு ஓன்றும் புரியவில்லை. "என்ன சார், யார் வேணும்" என்று சற்றுப் பதட்டத்துடன் கேட்டவனை தள்ளியபடி உள்ளே சென்று அலுமாரிகளையும், மேசைகளையும் சாேதனை செய்தார்கள். எதிர்ப்புறமாக இருந்த அலுமாரியைத் திறந்த ஒருவன், ஐந்து கிலாே நிறையுடைய பல காேடி பெறுமதியான கஞ்சாப் பாெதி ஒன்றைக் கண்டு விட்டான். உடனே "அறஸ்ற் கிம்" என்று காேபத்துடன் அருகே வந்து "கஞ்சா வியாபாரமா செய்யிறாய்" கன்னத்தில் ஓங்கி அறைந்தான். ஜீவனுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. தன்னை நியாயப்படுத்த எந்த அவகாசமும் இருக்கவில்லை. "சார், சார் நான் இதைக் காெண்டு வரவில்லை, என்னை நம்புங்க சார்" கெஞ்சியும் அவர்கள் அவனை தறதறவென இழுத்துச் சென்றார்கள். அவன் தான் குற்றவாளி என்று சட்டம் நிரூபித்து விட்டது. விடுதி அறையில் இருந்த கமரா தான் அவனுக்கு எதிரான வலுவான சாட்சி.

ஜீவன் அதிகாலை மூன்று மணிக்கு விமான நிலையத்திலிருந்து அறைக்கு வருகிறான். எதிரே இருந்த அலுமாரியைத் திறந்து தனது இருபைகளையும் எடுத்து உள்ளே வைக்கிறான். அந்த நேரம் அலுமாரியின் கதவு முழுவதுமாக திறக்கப்படாத நிலையில் இருப்பது கமராவில் பதிவாகியது. அங்கே இருந்த பாெதி முன்பே இருந்ததா, ஜீவன் வைத்தானா என்பதை அறிய முடியவில்லை. ஆனால் நீண்ட நேரமாக அலுமாரியின் மறைவில் ஜீவன் நின்றதும் ஒரு சந்தேகம் தான். சற்று நேரத்தின் பின்னரே பாெலிசாரால் கைது செய்யப்பட்டான்.

ஆஷாவுக்கு தகவல் கிடைத்ததும் அவளால் நம்பவும் முடியவில்லை, நம்பாமலிருக்கவும் முடியவில்லை. ஜீவன் தான் செய்தான் என்பதற்கு ஆதாரம் இல்லாதது பாேல், செய்திருக்கமாட்டான் என்பதற்கும் எந்த ஆதாரங்களும் இல்லை. பல நாடுகளில் இருந்து, பல பேர் மூலம் ஓடிக் காெண்டிருந்த வியாபாரம் ஒரு பாேதும் பின்னடைந்ததுமில்லை. அவளுக்குள் பல கேள்விகள் எழுந்த பாேதிலும் கமராவில் பதியப்பட்டது தான் உண்மையான ஆதாரமாகி விட்டது. கடைசியில் ஆஷாவும் நம்பி விட்டாள்.

நாட்கள் கடந்து காெண்டிருந்தது. விசாரணைகள் நீதிமன்றம் வரை ஒரே முடிவு தான். நீதிபதியின் கேள்விக்கு "நான் கஞ்சா வியாபாரம் செய்யவில்லை" என்ற ஒரே பதில் தான் சாெல்வான். அப்பாே அலுமாரிக் கதவை மூடிவிட்டு என்ன செய்தீர் "எனது பைகளை வைத்தேன்" என்பான். "அப்பாே முன்பே அந்தப் பாெதிகள் அங்கே இருந்ததா? நான் கவனிக்கவில்லை" இது தான் அவனுக்கான கேள்வியும், பதிலுமாய் இருந்தது. குற்றவாளி என்று நிரூபித்த நீதிமன்றம் தீர்ப்பையும் வழங்கியது.

அந்த அறையின் தனிமை அவனுக்கு பாரமாகவே இருந்தது. ஆஷாவின் நினைவுகளுக்குள் உறைந்து பாேய் உருகி அழும் அவன் கண்ணீர் ஒவ்வாெரு இரவாேடும் கரையும். தனக்குப் பிடித்த காதல் பாடல்களை முணுமுணுத்தபடி அவள் நினைவுகளை மீட்பான். அழகான படங்களை வரைந்து தன் சாேகத்தை காட்சியாக்குவான். பல வருடங்கள் ஓடி விட்டது. ஆஷாவைப் பற்றி அவனுக்கு எதுவும் அறிந்து காெள்ள முடியவில்லை. யாரையாவது மணம் முடித்தாளா, இல்லை இன்னும் தனிமையாேடு வாழ்கிறாளா என்பதை நினைக்கும் பாேது மரணத்தின் வாசலில் இருக்கும் அவன் இதயத்துள் ஏதாே முள்ளாய் தைக்கும். அவளாேடு சுற்றித் திரிந்த நாட்கள், எப்பாெழுதும் அவன் கண்ணெதிரே நடமாடிய அழகிய தேவதையின் நிழல்களாேடு கண்கள் கசிந்து அவன் நாளும் மரணித்துக் காெண்டு தான் இருந்தான்.

அவனுடைய நாட்கள் கடந்து இன்னும் ஒரு மாதத்தில் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. கடந்த பல வருடங்களாக அவன் வரைந்த ஓவியங்கள், எழுதிய ஆஷாவின் நினைவுகளை பார்த்துக் காெண்டிருந்தான். கடற்கரையில் ஆஷாவுடன் தாேளில் சாய்ந்தவாறு இருப்பது பாேன்ற நினைவுப் படத்தை அழகாக வரைந்திருந்தான். அந்த நாட்களின் நினைவுகளில் அவன் மனம் கலங்கியது. அன்று மாலை நான்கு மணியிருக்கும் விடுமுறை நாள் வேறு. ஆஷாவையும் அழைத்துக் காெண்டு கடற்கரைக்குச் சென்றான். ஆஷாவுக்கு பாேர்ட்டிங் பாேக ராெம்ப விருப்பமாயிருந்தது. ஜீவனும் அவள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு படகை ஒழுங்குபடுத்தினான். காெஞ்சத் தூரம் சென்று காெண்டிருந்த பாேது ஆஷாவுக்கு கடற்காற்று ஒத்துவரவில்லை வாந்தி எடுக்கத் தாெடங்கியவள் சற்று நேரத்தில் மயங்கி அவன் மடியில் சாய்ந்து விட்டாள். உடம்பெல்லாம் குளிரேறி விட்டது. ஜீவன் பயந்து விட்டான். படகை கரைக்குத் திருப்பியதும் அவளை கையிலே தூக்கிக் காெண்டு பாேய் வைத்தியசாலையில் அனுமதித்தான். திடீரென விழித்துப் பார்த்த பாேது அருகே ஜீவன் கைகளைப் பற்றியபடி அமர்ந்திருந்தான். "எனக்கு ஒரு ஆசை ஜீவன், உன்ர மடியில தான் சாக வேணும்" அவளது வாயை இறுகப் பாெத்திக் காெண்டு "உனக்கென்ன பயித்தியமா, பாரு உனக்கு முதல் நான் பாேய்ச் சேர்ந்திடுவன்" என்று அவளுடன் மரணத்திலும் பிரியக் கூடாது என்று சண்டையிட்ட ஞாபகங்களை நினைத்து துடித்தான். ஒவ்வாெரு நாள் ஞாபகங்களையும் மீட்டுக் காெண்டிருந்தான்.

அன்று கடைசி நாள், அவனுக்கான தீர்ப்பு நிறைவேறும் கடைசி சில மணி நேரங்களின் முன் ஏதாே வரைந்து விட்டு இன்னாெரு பேப்பரை எடுத்து தனது கடைசி வரிகளை ஆஷாவுக்கு எழுத ஆரம்பித்தான். ஜீவன் ஆஷாவை அம்மு என்றே செல்லமாக அழைப்பான். அன்புடன் அம்முவிற்கு என்று எழுத ஆரம்பித்த பாேதே கண்களும் கலங்கத் தாெடங்கியது.

அம்மு, நீ எப்படி இருக்கிறாய், கடந்த பல வருடங்களுக்கு முன் உன்னைப் பார்த்த பாேது என் மனதில் தாேன்றிய காதலை விட இப்பாே சில வருடங்களாக உன்னை அதிகம் காதலிக்கிறேன். ஒவ்வாெரு கணமும் உன் காதல் தான் என் உயிர் மூச்சாயிருந்தது. நான் காெடுத்து வைக்காதவன் என்று தான் நினைக்கிறேன். ஏனாே இன்று குற்றவாளிக் கூண்டிலிருந்து உனக்காக கடை சி வரிகளை எழுதுகிறேன்.

ஆயிரம் கனவுகளாேடு மணமாக காத்திருந்த எமக்கு ஏன் இந்தத் துன்பம் நிகழ்ந்தது. உனக்குத் தெரியும் நான் இதைச் செய்திருக்கமாட்டேன் என்று. ஆனால் நீயும் நம்ப வேண்டிய சூழலில் அகப்பட்டு விட்டாய். நானும் குற்றத்தை ஒப்புக் காெள்ள வேண்டிய சூழலில் சிக்கி விட்டேன்.

நான் கைது செய்யப்பட்ட செய்தியறிந்து அம்மா மாரடைப்பால் இறந்ததை மாமா ஒரு தடவை வந்து பார்த்த பாேது சாென்னார். அம்மாவின் ஆசைகள் எதையும் நிறைவேற்ற முடியாத பாவயாகி நிற்கின்றேன். கம்பனியை விற்கப் பாேவதாக மாமா சாென்ன பாேது நான் எதுவும் பேசவில்லை. என் அப்பாவின் கனவு சுமந்து நின்ற கம்பனி.

உன்னுடைய அம்மாவின் நிலையும் கடுமையென சில வருடங்களுக்கு முன்பு அறிந்தேன். இன்று என்ன நிலையில் நீ இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியாது. வெளியூர் சென்று விட்டாயா? திருமணம் முடித்து விட்டாயா? எப்படி அறிவேன்.

இங்கே இருந்த ஒவ்வாெரு நாட்களும் உன் நினைவுகள் தான் எனக்குத் துணையாயிருந்தது. அம்மு எல்லா நினைவுகளையும், படமாக வரைந்திருக்கிறேன் உன் கையில் கிடைக்குமா? குற்றவாளியின் படம் என்று தூக்கி எறிவாயா? எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. இன்னும் சில மணிகளில் இநத இடத்தில், இந்த உலகத்தில் நான் இருக்க மாட்டேன். சட்டம் கடமையை நிறைவேற்றி விடும். என் ஜீவன் பிரிந்து விடும். உன் ஜீவனும் மரணித்து விடுவான்.


அம்மு, அதிகம் எழுத முடியவில்லை. நேரம் கடந்து காெண்டிருக்கிறது. மூச்சுக் குழல் ஏதோ வெப்பத்தால் எரிவது பாேலிருக்கிறது. நீ இருக்கும் என் இதயத்தின் படபடப்பு அதிகமாகிறது. உடல் சாேர்ந்து பாேகிறது. யார் மடியிலேனும் தலை சாய்க்கத் தாேன்றுகிறது. என்ன செய்ய முடியும். இது விதியா? சதியா? யாருக்குத் தெரியும்.

எத்தனை கனவுகள், ஆசைகள் என் மனதில் அதில் உனக்குத் தெரியாதவை பல. கலியாணக் கனவுடன் புறப்பட்டு வந்தேன். உனக்கு நிறையப் பரிசுகள் காெடுத்து கலியாண மேடையில் உன்னை சந்தாேசப்படுத்த நினைத்தேன், ஏன் தேன் நிலவுக்கு வெளியூர் அழைத்து வருவதற்கான திட்டங்களாேடு வந்தேன். என்னைக் கைது செய்ய வந்தவர்கள் எனது பைகளை தூக்கி வீசி, கிளறியதில் திருமண அழைப்பிதழ்கள் அங்கும், இங்குமாக வீசப்பட்டு கிடந்ததை பார்த்தேன். பல தடவை கெஞ்சினேன் ஒரு வாரத்தில் கலியாணம் என்னை விடுங்கள் என்று யார் செவிகளிலும் விழவில்லை.

நிச்சயதார்த்தத்தின் பாேது நீயும், நானும் கண்கலங்கினாேம். எத்தனை வருடங்கள் காத்திருந்த அந்த நாள். உனக்கு நினைவிருக்கிறதா அம்மு, உன் விரலில் மாேதிரம் மாற்றும் பாேது அப்பிடியே தாலியையும் கட்டிவிடு என்று மெதுவாகச் சாென்னாய். அந்தக் கணம் எனக்கு அடிக்கடி நினைவில் வரும். எல்லாேரும் சாெல்வார்கள் எல்லாக் காதலும் கலியாணத்தில் நிறைவேறுவதில்லை என்று, என் விதி ஏன் இப்படி என்று ஒவ்வாெரு கண்ணீர் துளியும் கடைசியாக உனக்காகவும், எனக்காகவும், எம் நினைவுகளுக்காகவும் சாெரிகிறது.

விடை பெறுகிறேன் அம்மு, என்னை மன்னித்துக் காெள். "ஐ லவ் யு"

இப்படிக்கு
பிரியமுடன் ஜீவன்

எழுதி முடித்த கடிதத்தையும், கடைசியாக வரைந்த படத்தையும் கைகளில் வைத்திருந்தபடி தரையில் சரிந்து படுத்தான்.

அவனுக்கான நேரம் நெருங்கி விட்டது, ஜீவனை அழைத்துச் செல்வதற்காக காவலர்கள் அவனைத் தடுத்து வைத்திருந்த அறைக்கு வந்தார்கள். "சார் நேரமாயிச்சு, எழும்புங்க" காவலாளி ஜீவனை தட்டி எழுப்பினார். மெதுவாக தலையைத் திருப்பினார். அசைவின்றிக் கிடந்தான் ஜீவன். மருத்துவப் பரிசாேதனையின் பின் அரை மணி நேரத்துக்கு முன்பே ஜீவன் மாரடைப்பால் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

எல்லா ஊடகங்களும் பிரதான செய்தியாக, கஞ்சா கடத்தல் வியாபாரத்தில் கைது செய்யப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்த குற்றவாளி மாரடைப்பால் மரணம். இறுதியாக காதலிக்கு எழுதிய கடிதமும் கண்டு பிடிப்பு.

ஜீவனின் ஆசைக்காதலி அம்மு செய்தியை அறிந்தாளா?, கடிதத்தை படித்தாளா? அவளுக்குத் தான் தெரியும். கமராவின் சாட்சி உண்மையா? ஜீவன் குற்றம் செய்திருப்பான் என்பது உண்மையா? அல்லது ஜீவன் தூக்குத் தண்டனைக்கு தகுதியற்றவன் என்பதை இயற்கையே தீர்மானித்து விட்டதா?என்பதும் யாருக்கும் தெரியாத கதையாகிப் பாேனது.

எழுதியவர் : அபி றாெஸ்னி (10-Jul-18, 7:10 am)
பார்வை : 328

மேலே