வந்தாள் தந்தாள்

விறுவிறுவென வந்தாள்
விழித்தென்னைக் கண்டாள்
நாணத்தால் நெளிந்து நின்றாள்
சிறிது நேரம் கழித்து
தலை கவிழ்ந்தவாறு
என்னை நெருங்கி வந்தாள்
இளம் தென்றலாய் வந்தவள்
புயலாய் என்கன்னத்தை தொட்டுச் சென்றாள்...
அவள் பிஞ்சு விரல்களைக் கொண்டல்ல
சிவந்து வெடித்த பஞ்சு இதழ்களைக் கொண்டு
நச்சென்று
முத்தமொன்று தந்தாள்
என் மயக்கத்தில் இருவென்று...
இளம் பேதை தந்த போதையால்
பித்தம் தெளிந்தது
என் சித்தம் சிதைந்தது
அதற்கு மேலும்
எப்படி சொல்வது?
என் வாழ்வில்
நரகம் தொலைந்தது
சொர்க்கம் கிடைத்தது...!
அவள் அன்பில்
குடும்பம் வளர்ந்தது!

எழுதியவர் : கிச்சாபாரதி (11-Jul-18, 9:32 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 679

மேலே