விரைவில் சொல்

மின்னலை மிஞ்சும்
கண்ணொளியைக் கொண்டு
உள்ளக்காதல் திரியை
பற்றவைத்த தீயே
என்வாழ்க்கை நீயே
உன் மெளனத்தை உடைத்து
செவ்விதழை திறந்து
ஒத்த வார்த்தை பேசு
செம்மொழி தானே
என்னுயிர் மூச்சு...

தூய இலக்கிய வடிவே
எழுந்து வா என்னருகே
நெருங்கிய உறவே
இது இல்லை கனவே
என் முப்பால் தமிழே
எடுத்து படித்தால்
வாழ்க்கை இனிக்கும்
திருக்குறளை வாசித்தால்
அறம் பொருள் இன்பம் விளங்கும்
உலகம் அழிந்தாலும்
அழியாது இருக்கும்
உண்மைக் காதல் மொழி
நீயின்றி
என்னால் வாழ முடியாதுடீ
விழி திறக்காமல்
பொழுது விடியாதுடீ
மனம் திறக்காமல்
அன்பு சிறக்காதுடீ
பிரியமின்றி
சேர்ந்து வாழ்வதை விட
உண்மையை அறிந்து
பிரிந்து வாழ்வதே மேல்.....
ஆதலால்....
உன் விருப்பத்தை விரைவில் சொல்!

எழுதியவர் : கிச்சாபாரதி (13-Jul-18, 9:21 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : viraivil soll
பார்வை : 74

மேலே