உயிர் மூச்சே

உடலை ஆளும் உயிர் மூச்சே
உந்தன் உரிமை குரல் கேக்கிறதே ......

விளைநிலத்தை களம் ஆக்கும் வியாபாரிகளே
விவசாயின் கண்ணீரை காணாயோ ...

வானம் பாக்கும் பூமியை வளமாக்கும் மன்னனே
வருவோர்க்கு அள்ளிக்கொடுக்கும் வள்ளலே
உந்தன் பரந்த மனம் வாடுகிறதே......

பிள்ளை மனம் கொண்டோனே
பேரன்பு காட்டுபவனே
உன்னை பிரிய மனம் வாடுகிறதே

மலை கடந்து உன்னை பார்க்க வந்தேன் - ஆனால்
மறைத்து வைத்து ஏமாற்றுகிறார்கள் பலர்

மழையை எதிர்நோக்கி நிற்கும் உன்னை
ஏமாற்றும் மேகம் - இதை பார்க்க பார்க்க
என் உயிர் மூச்சே பிரிகிறதே ...........

எழுதியவர் : சத்யானந்த் (20-Jul-18, 7:58 pm)
சேர்த்தது : சத்யானந்த்
Tanglish : uyir mooche
பார்வை : 293

மேலே