அவளும் நானும்

உன்முகத்தில் பூரண நிலவின்
பொங்கும் எழிலும் குளிர்ச்சியும்
காண்கின்றேன் நான் கண்ணே என்றேன்

எந்தன் சந்திர முகத்திற்கு
ஒளி தரும் ஆதவன் அல்லவோ
என் அன்பே நீ என்றாள் அவள்

ஆழ்கடலில் மூழ்கி தேடி எடுத்த
நல்முத்தடி நீ என்னவளே என்றேன்,
அன்பே அந்த ஆழ்கடலில் நான்
கண்டெடுத்த நல்பவளம் அல்லரோ
நீ என்றாள் என்னவள் அவள்

என்னவளே நீயேதான் எல்லாம்
எனக்கு கேளடி என் இதயமே
அதை சொல்லும் என்றேன்

அன்பே என் நாடிதுடிப்பே
நீதான் நீ தான் என்றாள் அவள்

இப்படியே இந்நினைவில்
நம் உறவு நிலைத்திருக்க வேண்டுமடி
என்றேன் அதில் எனக்கு சந்தேகம் ஏது
அந்த உறவின் இயக்கம் நீதானே நீதானே என்றாள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Jul-18, 3:00 am)
Tanglish : avalum naanum
பார்வை : 567

மேலே