எனக்காக மலர்ந்த செந்தூரப்பூவே 555

என்னவளே...

நித்தம் பூத்து குலுங்கும் பூக்களை
பார்க்கும்போதெல்லாம்...

எனக்குள் சந்தோசம்
வந்தாலும்...

முதன் முதலில் பூத்த மலர் கொடுத்த
சந்தோசம் போல் இல்லை...

எத்தனையோ பெண்களை
நான் கண்டுருந்தாலும்...

உன்னை நான் பார்க்கும் போது
வந்த சந்தோசம் போல் வருமா...

எத்தனையோ பெண்கள்
உனக்கு முன்பும் பின்பும்...

நான் சந்தித்து
இருக்கிறேன்...

உன்னை கண்ட
சந்தோசம் இல்லையடி...

காவியம்கூட எழுதிவிடுவேன்...

உன்னை பார்த்த முதல் பார்வை
எப்படி எழுதுவேன்...

என்னுயிரே...

நீயே என் வாழ்க்கையாக வந்தால்
என் வாழ்வும் சொர்க்கம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-Aug-18, 8:48 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 524

மேலே