இமைகளிடம் கூறிவிடு

நீயற்ற என் கணங்களில் ஆக்கிரமிக்கும் உன் நினைவுகள்...,
என்னுடனே வந்துவிடும் நாழிகைகளின் மோகனமாய்..,
சொல்லித்தான் தீராது என் அன்பை.., என்னவனே..,
புத்தக வரிகளின் சுவாரஸ்யத்தை
நூலகம் எப்படி சொல்லும்..?
சில கவிதை ஆயிரம் பொய் சொல்லும்...
என் கவிதைகளில் கலப்படம் இல்லை...,
உன் பால் போன்ற குணத்தால்..!
உன் நேசத்தில் நிலைகுலைந்து போனவள் "நான்"..!
என்றேனும் பிரிவு நம்மை நெருங்கையில்...,
என் இமைகளிடம் கூறிவிட்டுப் போ..,
இறுதியாக பார்த்துக் கொள்கிறேன், என்று..!
நீ சென்ற பின் எப்படி உயிர்க்கும் என் "இமைகள்"..!..
நீயற்ற என் பொழுதுகள்.., "தாயற்ற மழலையாய்" அழுகிறது..,
அன்பு பலவிதம்...,
உன் அன்பில் உணர்ந்தேன் தூய்மை எனும் சொற்களின் "அகராதியை"..!

எழுதியவர் : சரண்யா (7-Aug-18, 5:32 pm)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
பார்வை : 212

மேலே