என் மரணத்தின் போது

என் .....
மரணத்தின் போது......
யாரும் அழவேண்டாம்......
நீங்கள் இழப்பதற்கு......
இன்னும் நிறைய இருக்கிறது.....!

என்.....
உடலை மரணத்தின் பின்.....
நீராட வேண்டாம்......
உயிருள்ள போது நன்றாக......
நீராடுகிறேன்..................!

என்.....
உயிரற்ற உடலுக்கு........
வாய்க்கரிசி போடவேண்டாம்.......
உயிருள்ளபோது நன்றாக.......
சாப்பிடுகிறேன்...............!

என் ......
மரணத்தின் போது......
ஈமைக்கிரிகைகள் எதுவும்.......
செய்யவேண்டாம்.......
கடவுள் பற்றற்றவன் அல்ல.....
கிரிகைகளில் பற்றற்றவன்.....!

என்.....
உடலை எரிக்காதீர்கள்......
புதைத்துவிடுங்கள்......
புழுக்கலும் பூச்சிகளும்.....
உணவாக உண்டு
மறைந்துவிடுகிறேன்.......!

^^^^^^
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்- இலங்கை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (10-Aug-18, 8:14 pm)
Tanglish : en maranthin bodhu
பார்வை : 104

மேலே