சுதந்திரதாகம்

சுதந்திரதாகம்

ஆள்பவர்களிடம்
அடிமைப் பட்டு கிடந்த காலம்
தியாக வீரர்களால் போனது!
சுதந்திர இந்தியா உருவானது!

எவர் கண்ணேனும் பட்டதோ?
நம் மதி மயங்கி விட்டதோ?

ஊழலுக்கும்,லஞ்சத்திற்கும் தலைவர்கள் அடிமைகளாய்,

சோம்பலுக்கும்,மதுவிற்கும்
ஆண்கள் அடிமைகளாய் ,

தொலைக்காட்சி பெட்டிகளுக்கு
பெண்கள் அடிமைகளாய்,

இணையவழி விளையாட்டிற்கு
குழந்தைகள் அடிமைகளாய்,

கையடக்க கைப்பேசிக்கு
மொத்த பேரும் அடிமைகளாய்

இருக்கும் நிலை என்று தான் மாறுமோ?
மற்றுமொரு சுதந்திரம்
நமை என்று வந்து சேருமோ?

எழுதியவர் : Usharani (15-Aug-18, 10:30 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 64

மேலே