பசி எனும் பசி

அம்மா பசிக்குதே
அய்யா பசிக்குதே
அய்யோ பசிக்குதே
அம்மம்மா பசிக்குதே
பசிக்குதே பசிக்குதே அம்மா பசிக்குதே
உலகம் பிறந்த நாளில்
இருந்து பசியின் ரசனை கூடுதே
பசித்தால் பறந்திடும் பத்தும்
வாழ்க்கையின் ரசனை கூட்டுதே
மின்னலை போலதொரு பசியை
உடல் ஏற்றால் துறவறமும் இன்பமே
துயிலும் பொழுதிலும் பசித்திட
கனவுகளிலும் தொடர்ந்திடும் போராட்டமே
நெஞ்சம் தாங்கிடும் பசியின் வீரம்
உடல்கள் தாங்கிட மறுக்குமே
கெஞ்சி கெஞ்சி வேண்டினாலும்
பசி நெஞ்சை தின்பதை நிறுத்தாதே
உலகம் செழிக்க உணர்ந்திடும் பசியை
உணர்ந்தே அறிவோம் ருசியை நாளுமே
கண்கள் வழியே பசியை அறிந்திடும்
வள்ளல் பெருமானை தேடியே
பசிப்பிணி போக்க நடைபோடும்
நடராசன் நானும் உலகை
காத்தருளும் தெய்வமே! தெய்வமே!
மனதால் வயதால் உடலால்
உழைப்பால் சிரிப்பால்
உவமையால் அன்பால் பண்பால்
ஒரு பொழுது பசியை வென்றிடலாமே
பின் மறுபடி மறுபடி பசியிடம்
தோற்பதே மானுட தர்மம் எனும்
கீதாஉபதேசமே! கீதாஉபதேசமே!