தீராத ஏக்கம்

*.....................தீராத ஏக்கம்........................**

*.உன் விழியோடு
என் விழி உரசி கொண்டே
இருக்க வேண்டுமென்று....................!!!

* இதழ்களும் தொடாமல்...
கைகளும் படாமல்
நித்தம் நித்தம்
விழியாலே
முத்தம் வேண்டும்....................!!!

*............... நான்கு விழியும் சந்திக்க...
முதலில் துள்ளி எழும் நம்...
இதயம்....................................*
விரலோடு
விரல் கோர்த்திட.....

உள்ளங்கைகளுக்கும்
மூச்சி முட்ட வேண்டும்......
நாம் கரம் பற்றிய இறுக்கத்தில்.......!!!!!!!!!!!!

உலகில் உள்ள
அத்தனை மொழிகளிலும்...
செல்லம் கொஞ்சிட
வேண்டும்....
கொஞ்சி கொஞ்சியே
நாம் கலைத்திட வேண்டும்....

காயங்கள் ஏதுமின்றி....
சிறு சிறு
மோதல்களில்
ஊடல்கள் வேண்டும்......

உன் விழியில் நானும்....
என் விழியில் நீயும்....
கனா காண வேண்டும்.....

தாயென நானும்....
சேயென நீயும்
நரை தொடும்
காலம் வரை....
வாழ்ந்திட வேண்டும்....

காதல் கொடியில்...
வாடாத
பூக்களாய்
மலர்ந்திட வா
என்னவனே...................!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : லீலா லோகிசௌமி (21-Aug-18, 7:11 pm)
Tanglish : theeraatha aekkam
பார்வை : 234

மேலே