கலைஞர்

அண்ணாவும்
தந்தையும்
முன்னே
சென்றதனால்
பின்னால்
வரும்
முத்தமிழ் வித்தகரை
தடம் பார்த்து
அழைத்து சென்றனர் தள்ளாத வயதல்லவா

அவர்
தமிழுக்கு அல்ல

ஈராயிரம் ஆண்டே ஆனாலும்
இன்னும் இளமைக்கு
குறைவில்லை
கொஞ்சி விளையாடும்
தங்கு தடையின்றி

இத்தனை ஆண்டுகள்
எங்களை பிரிந்து என்ன செய்திர்கள்
என்று வினவ

அவர் குரலில்
செம்மொழி தந்தேன்
சூரியன் அணையாமல்
பார்த்துக் கொண்டேன்
கவியரங்கம் பல கண்டேன்
வாலியிடம் தொடர்பு கொண்டேன்
தம்பியின் வைரமுத்துவை துணைக்கு
கொண்டேன்
திரைபடங்களுக்கு
கதை வசனம்
எழுதி வந்தேன்
சின்னத்திரை
சீரியல் ஒன்று
தந்தேன்
தொலைக்காட்சி துவக்கி வைத்தேன்
சூரியனுக்கு ஒன்று
எனக்கும் ஒன்று
கட்சிக்குள் சலசலப்பு
இருந்ததால்
மஞ்சள் துண்டை
போர்த்திக்
கொண்டேன்
மறுமுறை
தேர்தலில் வெற்றியும்
கொண்டேன்

நண்பர் MGRன்
உறுதி கண்டேன்
அது வரை
பதிமூன்று வருடம் பொறுத்து இருந்தேன்
மீண்டும் ஆட்சி
செய்தேன்
அம்மையாரின் வரவு கண்டு அதிர்ச்சி கொண்டேன்
அவரும் இங்கே
வந்தமையால் நானும்
வந்தேன்

சொத்துக்கள் சேர்த்து வைத்தேன்
மு.க. முத்துக்கள் மூன்றும்
அங்கே
முடித்து வைக்க போவது என்ன?

எழுதியவர் : த பசுபதி (7-Sep-18, 1:28 pm)
சேர்த்தது : பசுபதி
பார்வை : 459

மேலே