ரகசியம் 6

அன்று அமாவாசை வீட்டை விட்டு வெளியே யாரும் போகவில்லை...
வேலைக்கு போனவர்கள் சிலரும் இருட்டு வதற்கு முன் வந்து விட்டனர்....
ஊரே அமைதியாக இருந்தது...
ஆனால் காலையில் போன பெரியப்பா இன்னும் வீடு திரும்ப வில்லை... பெரியம்மா பதறி போய் அங்கும் இங்குமாய் நடந்து கொண்டு இருக்கிறாள்.....
அன்பு அங்கே வந்தான் என்ன ஆச்சு பெரியம்மா? ஏன் இவ்வளவு பதற்றமாய் இருக்கின்றீர்கள் என்றான்...
அதற்கு பெரியம்மா அதுவா ஒன்றும் இல்லை.. காலையில் போன பெரியப்பா மாலையில் வந்து விடுவார்.ஆனால் வழக்கத்திற்கு மாறாக இன்னும் வரவில்லை...இன்றோ அமாவாசை அவருக்கு தெரியுமோ? தெரியாதோ? என்ன வேலையாக இருந்தாலும்
இந்த நேரம் வீட்டில் இருப்பார்....
அத்தான் என்றாள் பெரியம்மா..
சரி நான் போய் பார்த்து அழைத்து வரவா? என்றான் அன்பு... வேண்டாம் வேண்டாம்
அவரே வருவார் என மேலும் பதறினாள்....
ஏன் பெரியம்மா பயப்படுறீங்கள்.. பெரியப்பா வேலை செய்யும் இடம் எனக்கு தெரியும்... நான் போய் பார்த்து அழைத்து வருகிறேன்...என்று அன்பு சொல்லி முடிக்கும் முன்பே பெரியப்பா வீட்டிற்குள் நுழைந்தார்..அப்பா.....,.பா.. நன்றி கடவுளே! என் பெருமூச்சு விட்டாள் பெரியம்மா....எங்க போறிங்க ? ஏன் இவ்வளவு
தாமதமா வீட்டிற்கு வந்திச்சு? இன்னைக்கு என்ன நாளுனு தெரியுமா?? என கேள்வி மேல கேள்வியா பெரியம்மா கேட்டத பார்த்து அன்பு ஆச்சரியமாக நின்றான்...
வேலைக்கு போய்டு வேலை அதிகமாக இருந்தா லேட்டா ஆகும்தான் ஏன் இப்படி கேள்வி கேட்குறாங்க... அதுமட்டுமல்லாது பெரியப்பாக்கிட்ட பேசவே யோசிச்சு யோசிச்சு பேசுவாங்க பெரியம்மா இப்போ என்னனா?இத்தனை கேள்வி கேக்குறாங்க... அவனுடைய குழப்பங்கள் அதிகத்து கொண்டே போனது... உடனே பெரியப்பா அன்பு நீ உள்ளே போ என்றார்...
அவன் கதவை அடைக்கும்
முன்னே பெரியம்மாவிடம் பெரியப்பா அவன் முன்னாடியே
எல்லாத்தையும் கேட்கிற.....
என்று முடித்தார்.... கதவை தாழ் இட்டு
பூட்டான் பூட்டி அடைத்தனர்.....


என்னதான் நடக்குது.. ஊருக்குள்? அன்பின்
பெரியப்பா வீட்டில் பிரச்சினையா?அன்பு தெரியாத அந்த ரகசியம் என்னவாக இருக்கும் ?????எனக்கே குழப்பங்கள் அதிகரிக்கிறது....
உங்களுக்கு ???

எழுதியவர் : உமா மணி படைப்பு (18-Sep-18, 9:13 am)
பார்வை : 194

மேலே