காதல் தந்த வலி

எங்கிருந்தோ வந்தாய் நீ
உன் பார்வையை
என்மீது வீசி
என் மனதை வென்றாய்
பக்கம் வந்து உறவாடி
காதல் கீதம் பாடி
என்னை வெகுவாய்
உன்னிடம் ஈர்த்துக்கொண்டபின்
ஒன்றுமே நடக்கவில்லைபோல்
எங்கோ ஓடி மறைந்தாய்

ஒரு கள்வனைபோல் வந்து
கவர்ந்து கள்வனைபோல் மறைந்தாய்
என்னுள் ஓர் இன்பம் தந்தாய்
நேசம் என்று நினைத்தேன்
மோகம் தந்தாய் நான் ஏதோ
சொல்ல நினைக்கையில் அதுவே
காதல் என்றாய்

பார்வையில் நேசம் கூட,
அதில் மோகமும் சேர
காதலாய் ஓர் உறவு அரும்பியது
என்று நினைத்தேன் , அனந்தமடைந்தேன் ,
நீயோ காணாமல் போக அந்த காதல்
கனியாய் முதிரா வேம்பாலானதேனோ .

நீ என்னை காதலிக்கின்றாய்
என்று நினைத்தேன் .............
நீ காணாமல் போய்விட்டாய்
என் வாழ்வில் 'உறவு' சேர்த்தாய்
என்று நான் இன்பம் காண்கயில்
'பிரிவு' என்னும் துன்பம் தந்தாய்
நீ மீண்டும் வருவாயோ தெரியாது
நீ தந்த வலி, நீ தந்த
உன் முதல் பார்வையோடு
என் மனதில் முள்ளாய் தைத்து நிற்கிறதே ,
மீளா வலி இதை யாரிடம் சொல்வேன் நான்
எப்படி தாங்குவேனோ................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Oct-18, 9:11 am)
பார்வை : 149

புதிய படைப்புகள்

மேலே