குடி குடியை கெடுக்கும்
டஸ்மாக்கெ கதி என்று கணவன்
அவனை திருத்துவது எப்படி
என்று புரியாமல் மனைவி
ராத்திரி வேளை, அவன் அங்கே
இவள் வீட்டில் உறங்க
துயில் கொண்டனவோ கண்கள்
பாவம் பேதை அவள்
உள்ளம் வேதனையில் தூங்கவில்லை