அழகிய தேடல்

அன்றைய காலைப் பொழுதில்
அழுது கொண்டே பொம்மை தேடும் குழந்தையை
அரக்க பரக்க குளிப்பாட்டி
அவசரமாய் சோறு ஊட்டி
அதட்டல் மிரட்டலுடன் பள்ளிக்கு அனுப்பி
ஆசுவாசத்துடன் சோபா மீதமர்ந்து
ஆரம்பித்தேன் கவிதை எழுத
அழகை ரசிப்பதால் மனம் மகிழ்வு பெறும்
ஆர்வத்துடன் தொடங்கி
அற்புதமாய் முடித்தேன் என் கவிதையை
அன்று மதியம் பள்ளிவிட்டு வந்த என் மகள்
அம்மா என் பொம்மை கிடைத்ததா
அது ரொம்ப அழகான பொம்மை
ஆமாம் காலையில் எதற்காகத் திட்டினீர்கள்
ஆதங்கத்துடன் கேட்டாள். பதில் இல்லை
ஆனால் என் கவிதை வரிகள் நீண்டன
அழகு எல்லாப் பொருளிலும் உள்ளது
அது பார்ப்பவர்களின் மனதைப் பொறுத்து வேறுபடும்
அறிந்து கொண்டேன் அழகினைப் பற்றி என்
அருமை மகளிடமிருந்து....

எழுதியவர் : நாங்குநேரி வாசஸ்ரீ (12-Oct-18, 9:50 am)
Tanglish : alakiya thedal
பார்வை : 1587

மேலே