அன்பே வந்துவிடு
இரவு நேரத்துல,
இளமை ஓரத்துல,
இளங்காத்து வீசுது,
இளமனச மாத்துது..
உன் மூச்சுக்காத்து பட்டு-
என் உயிரும் மலராதோ !
உன் இதழின் ஈரம்பட்டு-
இன்ப ஆசைகள் துளிர்க்காதோ !
உன் குறும்பு மீசை பட்டு-
இந்த குயிலும் சிணுங்காதோ!
என் கனவுகள் தீர்க்கவே-
உன் காதலும் வாராதோ !
ஆசை கனவுகளில்-
என்னை எங்க வைத்தவளே,
உன் அன்பை நான் பெறவே-
நீ அருகே வருவதெப்போ !
குறுங்காட்டில் மலர்த்திரைபோல்-
மனதுக்குள் உன் நினைவலைகள்
அன்பே வந்துவிடு,
என் தனிமை தீர்த்துவிடு...