கிரியாஊக்கியாய்

தென்றலாய் தீண்டி
உன் மேலாடை பறக்க விடவா
கன்னலாய் மாறியுன்
கடும் தாகம் தணித்து விடவா

என் சூடிதார் சுந்தரியே...

நீ நடந்தால் ஆயிரம்
அன்னங்கள் உன் பின்னாலே
நீ அபிநயித்தால் அழகு
ஊர்வசிதான் என் கண் முன்னாலே

பாவை உன் காதல் வேண்டி
பல்லாண்டு தவமிருப்பேன்
தேவையுன் கடைக்கண் பார்வை
பாவி மனதிற்கு கிரியாஊக்கியாய்...

எழுதியவர் : ஜெய் ரெட்டி (1-Nov-18, 12:11 pm)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
பார்வை : 62

மேலே