உனைத் தழுவிக் கொண்டோடுது கவிதை அலை

உனைத் தழுவிக் கொண்டோடுது கவிதை அலை
*******************************************************************************

தமிழே உனக்கொரு இனிய கலை -- அதைத்
தழுவிக் கொண்டோடுது கவிதை அலை

அமிழ்தாய் இனித்திடும் உனது சுவை - உனைப்
பழுதின்றி ஆள்வது எனது கலை

பண்ணோடு இசைப்பது உனது அசை -- எனில்
புண்ணின்றிக் காத்திடும் எனது இசை

அரங்கினில் ஏறும் உனது நடை -- அங்கு
கரங்கெனச் சுழலும் ஓசை அலை

சங்கம் கண்டது உனது தளை -- அதில்
அங்கம் வகிப்பது எனது தலை

எம்மொழி சார்ந்து நாடி ருந்தாலும் --நம்
செம்மொ ழிக்கீடுயிணை ஏதுமிலை

எழுதியவர் : சக்கரைவாசன் (2-Nov-18, 12:52 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 175

மேலே