மன முறிவு

தூங்காமல் இருந்துவிட்டால்
விடியாதோ,
மறுநாளும் வாராதோ
என்றெண்ணி;

தாங்காமல் நீர்சொரிந்து
கண்ணில்,
சேராமல் விழித்திருந்து;

ஏமாற்றம் விடிந்ததும்
மனமுவந்து,
ஏறுபோல் நடைபழகி;

பிசையாது நாற்றம் தரும்
மார்கழியாய்,
புன்னகை தனை சுமந்து;

புதியதோர் பாதைத்தனை
ஏற்பதுமோர் பகுதி!

எழுதியவர் : __வினோ__ (1-Dec-18, 8:09 am)
சேர்த்தது : வினோ
பார்வை : 126

மேலே