சிரிப்பூட்டும் கோபம்
எப்போதாவது நீ
சினந்து திட்டினால்
எனக்கும் கோபம் வரும்.
நாள் முழுக்க திட்டினாலும்
உன் வாய் ஓயாது.
என் சினத்தை நீ
சிதறடித்து விடுவதால்
நான் சிரித்துச் சிரித்து
மகிழ்கிறேன்.
உச்சிக்குச் செல்லும் உன் சினம்
வெறித்தனமாய் மாறினாலும்
நான் சிரித்துவிட்டுப் போகிறேன்.
உனக்குப் பிடிக்காதவன் நான்
என்னைத் திட்டுவதோ உனக்குத்
தித்திக்கும் தேன்.
பூவுலகில் நான் உன்
முதல் எதிரி என்றாய்.
நான் இறந்தால் நரகத்தில்
இருப்பேனாம்.
நீயோ சொர்க்கத்தில் இருந்தபடியே
என்னைத் தண்டித்துப் பழிவாங்குவாயாம்.
நானும் அந்த நாளுக்காக காத்துக்கிடக்கிறேன்.
வா ராணி வா.