இப்படிக்கு உன் ப்ரிய சிநேகிதி
கனவில் வந்து தினம்
நடக்கப் போகிறவள் நானில்லை
கற்பனை வானில் உன்னை
மிதக்கவிடும் காதல் சுந்தரி நானில்லை
அந்திவானையும் அழகு நிலவையும்
உவமை சொல்லி கவிதை எழுதத் தேவை இல்லை
வா இனிய மாலையில்
பூமியின் யதார்த்தங்களை பேசி நடப்போம் ...
இப்படிக்கு ,
உன் ப்ரிய சிநேகிதி .