செல்வம் பயன்படுத்துவார்க்கே உரியதாம் – நன்னெறி 4
நேரிசை வெண்பா
பிறர்க்(கு)உதவி செய்யார் பெரும்செல்வம் வேறு
பிறர்க்(கு)உதவி ஆக்குபவர் பேறாம் – பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடல்நீர் சென்று புயல்முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு. 4 - நன்னெறி
பொருள்:
எவர்க்கும் உதவாத கருங்கடலின் நீரை புயல் மேகங்கள் முகந்து சென்று எப்படி மழையாக எவர்க்கும் கொடுத்து விடுகிறதோ, அது போல பிறர்க்கு உதவாதவர் பெரும் செல்வத்தையும், எவர்க்கும் உதவுபவர் எடுத்துக் கொள்வர்.