செல்வம் பயன்படுத்துவார்க்கே உரியதாம் – நன்னெறி 4

நேரிசை வெண்பா

பிறர்க்(கு)உதவி செய்யார் பெரும்செல்வம் வேறு
பிறர்க்(கு)உதவி ஆக்குபவர் பேறாம் – பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடல்நீர் சென்று புயல்முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு. 4 - நன்னெறி

பொருள்:

எவர்க்கும் உதவாத கருங்கடலின் நீரை புயல் மேகங்கள் முகந்து சென்று எப்படி மழையாக எவர்க்கும் கொடுத்து விடுகிறதோ, அது போல பிறர்க்கு உதவாதவர் பெரும் செல்வத்தையும், எவர்க்கும் உதவுபவர் எடுத்துக் கொள்வர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Dec-18, 8:51 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 93

சிறந்த கட்டுரைகள்

மேலே