எப்படி இருப்பாளோ அவள்

அன்று ஒரு கூட்டத்தில்
பார்த்த அவள் முகம்
அழகுச் சிலையாகிப் போனது
என் நினைவில்.

ஓரிரு ஆண்டுகள் கடந்து
அறிமுகமில்லாப் பெண் ஒருத்தியின்
குரல்
ரீங்காரமிட்டது என் செல்பேசியில்.

அவள் என் ரசிகையாம்!
என் பேச்சால் ஈர்க்கப்பட்ட அவள்
என்னோடு பேசினாள் இன்று.

என் நெஞ்சில் அழகுச் சிலையாய்
நிற்கும் அவள்தானோ இவள்?
காதில் மலைத் தேனை
ஊற்றிய இவள் அவள் தானோ?

இவள் அவளாக இருந்தால் என்ன?
என்னவள் ஆனபின்பு
என் நெஞ்சில் அழகுச் சிலையாக,
என் காதில் தேனாய் இனிக்கும் தமிழாக இருந்து

என்றும் என்னோடு வாழ்பவள்
எங்கிருந்தாலும் வாழ்க!

எழுதியவர் : மலர் (1-Feb-19, 9:34 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 129

மேலே