கார்முகிலாள் தரும் சுகமோ

கார்முகிலாள் தரும் சுகமோ ?
*****************************************************

கார்முகிலும் மழைஆக பயிர்செழிக்கும் புவிஉய்ய
அரு முகில் தருமிசையோ நம்மனதை வருடிநிற்கும்
நறு முகில் அதுஅளிக்கும் நல்லமணம் நாசிக்கு
ஒரு முகில் இடிஆக மறுமுகிலோ மின்னிநிற்கும்
கார்முகிலாள் தரும்சுகமோ என்றென்றும் நினைவிருத்தும் !

எழுதியவர் : சக்கரைவாசன் (15-Feb-19, 7:03 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 99

மேலே