நிதியுங் கணவனும் தந்தம் விதியின் பயனே பயன் – மூதுரை 19

நேரிசை வெண்பா

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியுங் கணவனும் நேர்படினும் தந்தம்
விதியின் பயனே பயன். 19 - மூதுரை

பொருளுரை:

ஆழமாகிய கடலின் நீரை படியால் ஆழமாக அழுந்தும்படி அமிழ்த்தி மொண்டாலும், ஒரு படியானது நான்கு படி நீரை மொள்ளாது.

அதுபோல, தோழியே, பெண்டிர்க்கு மிகுந்த பொருளும் தக்க கணவனும் கிடைத்தாலும் அவரவருடைய ஊழின் அளவாகிய பயனளவே அனுபவிக்கப் பயன்படும்.

கருத்து:

வேண்டும் பொருளெல்லாம் கிடைத்திருந்தாலும், பழ வினையின் அளவன்றி மிகுதியாய் அனுபவிக்க முடியாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Feb-19, 12:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 127

சிறந்த கட்டுரைகள்

மேலே