கவி என் வழியில்
எந்திர தேகத்தின் முகவரி;
சிந்திய வியர்வையின் முதல் வரி.
உணர்வுகள் பேசிடும் இதன் வழி;
பேசாத மௌனத்தின் ஒரு மொழி.
உறவின் தொடக்கத்தின் வாசம்;
உயிர் உறக்கத்தின் சுவாசம்.
நிழலின் நிறங்களின் நேசம்;
நிஜத்தின் நிழலும் இதை பேசும்.
மொழியின் வழி எழும் விமர்சனம்;
உயிரின் வலி தரும் சமர்ப்பணம்.
இதுவே கவிதை
என் வழியில்......