கவி என் வழியில்

எந்திர தேகத்தின் முகவரி;
சிந்திய வியர்வையின் முதல் வரி.
உணர்வுகள் பேசிடும் இதன் வழி;
பேசாத மௌனத்தின் ஒரு மொழி.
உறவின் தொடக்கத்தின் வாசம்;
உயிர் உறக்கத்தின் சுவாசம்.
நிழலின் நிறங்களின் நேசம்;
நிஜத்தின் நிழலும் இதை பேசும்.
மொழியின் வழி எழும் விமர்சனம்;
உயிரின் வலி தரும் சமர்ப்பணம்.
இதுவே கவிதை
என் வழியில்......

எழுதியவர் : krish (5-Mar-19, 12:52 pm)
சேர்த்தது : Krish
Tanglish : kavi en valiyil
பார்வை : 240

மேலே