எப்படி வந்தது நமக்குள் இடைவெளி 555
அழகே...
என் பெயரை
உச்சரித்தாலே...
உன் அருகில் நான்
இருப்பேன் என்றாயடி...
இன்னும் இருக்கிறேனா
உன் அருகில் நான்...
இமை மூடியே
காண்கிறேன் உன்னை...
நான் நித்திரையில்
தினம் தினம் உன்னை...
என் எதிரே நீ வரப்போவது
எப்போதடி கண்ணே...
நீயும் நானும் சிறு
இடைவெளி
இன்றி இருந்தோம்...
எப்படி வந்தது இந்த இடைவெளி
நமக்குள் இப்போது...
சிந்திக்கிறேன் நாம்
இனி
சந்திப்போமா என்று.....