யார் அந்த தாமரை…
நிலவொன்று நடந்தது சுவடுகள்
நிழலாக பதிந்தது மனதிலே..
மழை ஒன்று சாரல் துளியாய்
சில் என்று நனைக்குது மனதிலே ..
விழியிலே தெரிகிறாள்
யார் அந்த தாமரை…
செவியில் நுழைகிறாள் யார்
இந்த கொலுசொலி..
அடி காதலியே, என் கண்மணியே
உன் நினைவே எந்தன் உயிர் துளி..
என் நெஞ்சில் நீயோ பனி துளி
கோடி சூரியன் வந்தாலும் என்
உயிர் கொடுத்து நான் உனை காப்பேன்..
மாலை வேலையில் உன் மடியில்
மழலை குழந்தையாய் நான் ஆவேன்..