காதல் மனமொத்தது

முதல்முதலாய் நீ
காலெடுத்து அடி வைத்தபோது
மகிழ்ந்த உன் மாமன்
இன்றும் உன் பாதத்தின் அடிகள்
இருபத்தொரு வருடங்களில் மீண்டும் ,
என்னை நோக்கி வருமென்று
கனவில் கூட நினைக்கவில்லை
உன்னை அப்படி சிந்தித்து பார்க்கவுமில்லை
ஆனால் நீ என்றும் எங்கும் மகிழ்வுடன்
வாழ வேண்டுமென்றுதான் ஆசைப்பட்டேன்
கடவுள் உன்னையே பரிசாக என்னிடம் .......
தாய்மாமன் நான் உன்னை இன்று
என் நெஞ்சில் ஏற்றிவிட்டேன்
அதில் உன் பாதங்கள் நடந்து நடந்து
இதயத்தில் கல்வெட்டுகள் போல்
இனியும் நீங்காதடி நம் பாசம்
இன்று உணருகிறேன் இதற்காகத்தான்
உன்ன நேசித்தேன் பூஜித்தேன் என்று
என் கண்ணுக்குள் இருந்த உன்னை
இப்போ இதயத்தின் ராணியென
என் இதய சிம்மாசத்தில் ,ஆகா /
என்ன அற்புதம் அழகு ஆரம்பம்
காதல் எனும் இன்ப ஊற்று ஊற்றெடுத்து
என்னுள் வியாபிக்கிறது ,இது தான் காதலா/
காதல் நிறமற்றது, காதல் மனமொத்தது ,
காரணங்கள் புரியவில்லை காதலுக்கு ,,,,,

எழுதியவர் : பாத்திமாமலர் (31-Mar-19, 10:58 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 189

மேலே