அறிவான் அலது பிறப்பினால் மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க – நன்னெறி 22
இருவிகற்ப நேரிசை வெண்பா
ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால்
மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க - நீக்கு
பவர்யார்? அரவின் பருமணிகண் டென்றும்
கவரார் கடலின் கடு. 22 - நன்னெறி
பொருள்:
பாம்பிடம் தோன்றிய மணி என்றும், பாற்கடலில் தோன்றிய விஷம் என்றும் கொள்வார் எவருமிலர்.
எனவே உயர்த்துகின்ற அறிவைக் கொள்ளாது பிறப்பினால் உயர்வு தாழ்வு பார்க்க வேண்டாம்.