வேண்டியது
அடிபம்பில் தண்ணீர்
அளவு குறைவாய் வந்தாலும்,
அது
குடிக்க உதவுகிறது
குறைக்கிறது தாகத்தை..
கண்ணுக்கெட்டா தூரம்வரை
கடல்நீர் இருந்தாலும்
குடிப்பதற்கு உதவாததால்
கடந்துவிடுகிறோம்
கை கழுவிவிட்டு..
உருவில் பெரிதானாலும்
உதவாவிடில் சிறிதும்,
உதறப்படவேண்டியது
உண்மைதானே...!