சொல்லிய காதல் சுகத்தில் 555

என்னுயிரே...


நீ சோகம் என்று

சொல்லும்போதெல்லாம்...


என் நெஞ்சோடு

உன்னை அனைத்து...


உன் வலிகளை சுமக்க

நினைக்கிறேன் நானும்...


என்னுடன் உன் சோகம் சந்தோசம்

எல்லாம் பகிர்ந்து கொள்பவள் நீ...


என் காதலை உன்னோடு

பகிர்ந்து கொண்டேன்...


உன் மனதை

என்னிடம் கொடுத்தாயா...


கொடுக்க மனமில்லையென

சொல்ல தயங்குகிறாயா...


உன் கலங்கிய

கண்ணீர் துளி விழிகளை...


என் விழிகளின்

அருகில் காணவேண்டும்...


அதுவரை உறக்கமில்லை

என் விழிகளில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (7-May-19, 8:48 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 495

மேலே