கற்றிடு மனிதம் நிலைபெற

பிறந்த பிள்ளை பார்த்துப் படித்திடும்
பின்னர் பலவும் கேட்டுக் கற்றிடும்,
பறந்து சென்றே பாட சாலையில்
பயின்ற கல்வி தொடரும் வாழ்விலே,
சிறந்த கல்வி யென்ப திதுதான்
சேர்ந்து மனிதர் ஒன்றாய் வாழ்வதே,
மறந்தி டாதே கற்றிடு நன்றாய்
மனிதம் யென்றும் நிலையது பெறவே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (7-Jun-19, 6:23 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 82

மேலே