ஏமாந்து ஏமாந்து

பறந்து பறந்து
விளக்கொளியில் விழுந்து மடிந்தது
விட்டில் பூச்சி
ஒளி உணவல்ல என்று புரியவில்லை

ஓடி ஓடித் திரிந்து
சோர்ந்து மயங்கி விழுந்தது
மான்
கானல் நீரென்று புரியவில்லை !

அமர்ந்து அமர்ந்து பார்த்து
இலவம் பஞ்சாய் வெடிக்கும்வரை
கிளிக்கு
பஞ்சு பழமில்லை என்று புரியவில்லை !

இப்படித்தான் அரசியலிலும்
நம்பி நம்பி ஒட்டுப் போட்டு
பாவம் மக்கள்
விட்டிலாய் மானாய் கிளியாய்
ஏமாந்து ஏமாந்து ................

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jun-19, 9:14 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : yemanthu yemanthu
பார்வை : 228

மேலே