அவளும் நிலவும்
கலைகள் பதினாறு கொண்ட அம்புலி
பௌர்ணமி இரவில் தண்ணொளி பரப்பி, மண்ணில் மண்ணெலாம், மலையும், நதியும்
வெள்ளிமயமா யாக்கி தனிப்பெரும் எழிலாய்
நீலவானில் மிதந்து வர என்னுள்ளத்தில் மகிழ்ச்சிபொங்க
மாசிலா நிலவாய் மண்ணிலுலாவி வந்தாள்
மாதவள், என் மனத்தைக் கவர்ந்தவள், என் மனம் குளிர; அவள் அங்கங்கள் ஒவ்வொன்றும் அம்புலி கலைகளோ, இப்படி கலைகளெல்லாம் அள்ளித்தருதே பேரொளி
அவள் முகத்தில் அந்த நிலவின் எழில் ஒளிபோல்