நான் என்ன கசாப்புக் கடைக்காரனா

ரத்தத்தின் ரத்தமே!
@@@@@
நான் என்னடா கசாப்புகடைக்காரனா இல்ல கொலைவெறி பிடிச்ச ரவுடியா? எனக்கு விலங்குகள் கடிச்சிட்டு ரத்தம் வழியறதப் பாத்தாவே கண் கலங்கும். ரவுடி கொலைகார வெறியர்களவெறியர்களால் கடுமையாக தாக்கப்பட்டு ரத்தம் வடியக் திடக்கிற உடலப் பாத்தாவே அழுதிடுவேன். என்னைப் போயி ரத்தத்தின் ரத்தமேன்னு கூப்பிட்டு ஏன்டா என்ன இழிவு படுத்தற? நான் வள்ளலார் வழி வாழறவன்டா.
@@@@@
நீ எஞ் சித்தப்பா பையன். ரத்த உறவு. அதனாலதான்டா பாசத்தோட உன்ன அப்பிடி கூப்பிட்டேன்.
@@@@@
உன்னைவிட நான் ஒரு வருசம் சின்னவன். என்னப் பேரச் சொல்லிக் கூப்பிடு. இல்லனா தம்பின்னு கூப்பிடு. என்னை இனிமேல் ர ரன்னு கூப்பிட்டா உம் மொகத்தில முழிக்கமாட்டேன்.

எழுதியவர் : மலர் (1-Jul-19, 9:16 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 110

சிறந்த நகைச்சுவைகள்

மேலே