தத்துவம்

உலகில் பறந்து கிடைக்கும்
படைப்புகள் அத்தனைக்கும்
முடிவு உண்டு , அது நட்சத்திரமோ
கோள்களோ இல்லை , கல்லோ
மண்ணோ, கடலோ , சமுத்திரமோ
இல்லை மனிதரோ, மிருகமா ,தாவரமோ
ஆனால் இவற்றைப் படைத்தவன் அவனோ
ஆதி, அந்தம் இல்லாதவன் ….அதனால்
இருப்பான், இல்லாததுபோல் இருப்பான்
பார்த்தும் நாம் உணராமல் ……..அதனால்
அவன் இல்லை என்பார் சிலர்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (7-Jul-19, 12:31 pm)
Tanglish : thaththuvam
பார்வை : 271

மேலே