சிந்தும் புன்னகையில் ஏனிந்த மௌனம்
நீலவிழிகளில் நைலின் எழிலைப் பார்க்கிறேன்
நீந்துகின்ற கயல்களை அதில் ரசிக்கிறேன்
இமைகள் இரண்டும் மூடித் திறக்கும் போது
அந்தியின் அதிசயம் என் முன் நிற்க காண்கிறேன் !
சிந்தும் புன்னகையில் ஏனிந்த மௌனம்
சிவந்த இதழோடையில் அது என்ன புதிய சலனம் ?