இனிமேல் மழைக்காலம்
இனிமேல் மழைக்காலம்!
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
தனிமையில் அமர்ந்து
இனிய மழைபொழியக் கண்டு
கனிமரங்கள் காய்க்கும்
கதிரவன் வெப்பக்கதிர்கள்
சப்தமில்லாமல் தணியும்!
வானில் வானவில்
வர்ணஜாலம் காட்டும்
கருமேகங்கள் உறவாடி
தெருவெங்கும் நீரோடும்
மழைபொழியக் கண்டு
மக்கள் இன்பத்தில் மிதப்பர்!
வறட்சியால் ரேகைபோல்
விரிந்த பரந்த நிலங்கள்
இனிமேல் மழைக்காலம் கண்டு
இன்பக் காதலர்கள் இதழ்கள்
சந்திப்பதுபோல்
சத்தமில்லாமல் முத்தமிடும் !
இனிமேல் மழைக்காலம் கண்டு
மான்கள் துள்ளி ஓடும்
மீன்கள் துள்ளி விளையாடும்
ஆடு மாடுகள் பசுமை கண்டு
ஆனந்தத்தில் அசை போடும்
ஏங்கிய ஏரிகுளங்கள்
தூங்கிய கிணறுகள்
மழைநீரைக் கண்டு
தாங்கி தங்க வைக்கும் !
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்