அபி கவிஞர்
அபி
பிறப்பு 1942
போடிநாயக்கனூர், தமிழ் நாடு, இந்தியா
தேசியம் இந்தியன்
பணி பேராசிரியர், கவிஞர்
பணியகம் மேலூர் அரசுக் கலைக் கல்லூரி
பிள்ளைகள் மகன்கள் அஷ்ரப் அலி, ரியாஸ் அஹ்மது. மகள் பர்வின் பாத்திமா[1]
=========================================================================================================================
அபி என்ற பீ. மு. அபிபுல்லா (பிறப்பு: 1942) என்பவர் தமிழ்க் கவிஞராவார். இவர் 2019 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருதினைப் பெறுகிறார்.[2] தமிழில் அருவக் கவிதைகளுக்குக் கவனிக்கப்பட்ட புதுக்கவிஞராவார்.[3] இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.[1]
வாழ்க்கை
1942 ஆம் ஆண்டு போடிநாயக்கனூரில் பிறந்தவர். லா.ச.ராவின் நாவல் உத்திகளை ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றார்.[4] மேலூர் அரசுக் கலைக்கல்லூரில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
இவரது நூல்கள்
மெளனத்தின் நாவுகள் (1974) - கவிஞர் மீரா அவர்களால் அன்னம் பதிப்பகம்[5]
அந்தர நடை (1978)
என்ற ஒன்று (1987)
அபி கவிதைகள் (2013) - கலைஞன் பதிப்பகம்
விருதுகள்
2004: கவிக்கோ விருது
2004: கவிக்கணம் விருது
2008: கவிஞர் தேவமகள் அறக்கட்டளை விருது[1]
2011: சிற்பி இலக்கிய விருது[6]
2019: விஷ்ணுபுரம் விருது[2]
---------
மேற்கோள்கள்
"கவிதை படிப்பது என்பது ஏதோ மலையைப் பிளக்கும் செயலல்ல !". தீராநதி. ஆகஸ்டு 2009. பார்த்த நாள்: 30 July 2019.
"கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது". பார்த்த நாள் 30 July 2019.
6.2 இக்காலச் செய்யுள் இலக்கியங்கள். த.இ.க..
"கவிஞர் அபி – நேர்காணல்". சமரசம். ஜனவரி 2000. பார்த்த நாள்: 30 July 2019.
"கவிஞர் மீரா". தென்றல். பார்த்த நாள்: 30 July 2019.
"சிற்பி இலக்கிய விருதுக்கு கவிஞர்கள் தேர்வு". தினமலர். பார்த்த நாள்: 30 July 2019.