நட்பின் இலக்கணம்
நெஞ்சில் நஞ்சின்றி நயவஞ்சகம் ஏதுமின்றி
நேராக கண்ணும் கண்ணும் பார்த்து தோழமைக்
கரம் நீட்டும் அவன்தான் நல்ல நண்பன் ;lஉயிர்த்தோழனாய்
உன்னை உன்னத நிலைக்கு ஏற்றி அதில்
பேரின்பம் கொள்வான் அவன் , அவனே நட்பின் செல்வன்
நீ தேடும் உயர் நண்பன் என்றறி மனமே.