நட்பே நலமா
விழித்தேடலின் விடையாய்
இமைகளுக்குள் நிறைந்தாய்
கரைந்தோடும் வண்ணமாய்
மனதினில் உறைந்தாய்
காலங்கள் கடந்தும்
சுகமான சுமையாய்
என்று முன்நினைவுகள்
நெஞ்சை நிறைக்கும்
கண்காணா தேசத்தில்
எங்கிருந்தாலும் நலமாய்
இன்முகம் கோணாமல்
இனிதே வாழ்க!